968 AD- அரசியல் சூழ்ச்சிகள்,மர்மங்கள்,குழப்பங்களால் கொந்தளித்துக் கொண்டிருந்து சோழப்பேரரசு. சோழகுலத்தையே அழிக்க சபதம் எடுத்த பாண்டிய ஆபத்துதவிகள் ஒரு புறம்,சோழ பேரரசிற்க்கு எதிரான சதியில் இறங்கிய சிற்றரசர்கள் மறு புறம். இவைகளுக்கு இடையே சோழ நாட்டின் அடுத்த அரசராகப்போவது யார்? இளவரசன் ஆதித்த கரிகாலனா, இளையோன் அருண்மொழி வர்மனா,அரியணைக்கு உரிமைகோரும் மதுராந்தகனா அல்லது பாண்டிய இளவரசன் அமரபுஜங்கனா?