968 கி.பி, அருண்மொழி கடலில் மூழ்கி இறந்ததாகப் பரவிய செய்தியால் சோழநாடு கொந்தளித்தது. பாண்டிய ஆபத்துதவிகள் சோழ வம்சத்தை வேரோடு அழிக்க சபதம் பூண்டனர். இளவரசர்கள் பாண்டியர்களையும், ராஷ்டிரகூடர்களையும், சோழதேசத்தின் உள்நாட்டு சதிகாரர்களையும் எதிர்நோக்கி நின்றனர். சோழப்பேரரசின் இத்தனை கொந்தளிப்பும் குழப்பங்களும் பல வருடங்களுக்கு முன்னால் தொடங்கியது, நந்தினி எனும் ஒரு சிறு அநாதைப்பெண் வழியாக.